யாம் துவான் பெசார்
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளர் / From Wikipedia, the free encyclopedia
யாம் துவான் பெசார் அல்லது யாங் டி பெர்துவான் பெசார் (ஆங்கிலம்: Yamtuan Besar; Yang di-Pertuan Besar (Grand Ruler); மலாய்: Yang di-Pertuan Besar of Negeri Sembilan) என்பது மலேசியா; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளரின் அரச பட்டமாகும். அந்த மாநிலத்தின் ஆளும் தலைவர்கள் அல்லது உண்டாங் (Undang) எனும் குழுவினரால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.[1]
விரைவான உண்மைகள் யாம் துவான் பெசார் Yamtuan Besar, முடிசூட்டுதல் ...
யாம் துவான் பெசார் Yamtuan Besar | |
---|---|
Duli Yang Maha Mulia | |
மாட்சிமிகு துவாங்கு முகிரிஸ் | |
முடிசூட்டுதல் | 26 அக்டோபர் 2009 |
முன்னையவர் | இராஜா மெலேவார் |
மூடு
இந்த அரச நடைமுறை 1773-ஆண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. யாம் துவான் பெசார், நெகிரி செம்பிலானின் நான்கு முன்னணி இளவரசர்களில் (Putera Yang Empat) இருந்து தேர்ந்தெடுக்கப் படுகிறார்.