யாக்கோபு நற்செய்தி
From Wikipedia, the free encyclopedia
யாக்கோபு நற்செய்தி[2] என்பது கன்னி மரியாள் அற்புதமான கருத்தரிப்பால் பிறந்ததையும், அவரது வளர்ப்பு மற்றும் யோசேப்புடன் திருமணம், பெத்லகேமுக்கு பயணம், இயேசுவின் பிறப்பு ஆகிய நிகழ்வுகளைக் கூறும் 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குழந்தைப் பருவ நற்செய்தியாகும். [3] [4]
இது மரியாளின் நிலையான கன்னித்தன்மையை உறுதிப்படுத்துகின்றது.[5] எனினும் கி.பி. 405இல் போப் இன்னசென்ட் I இந்த நற்செய்தியை கண்டனம் செய்தார், பின்பு 500களில் கெலாசியன் ஆணையால் இந்த நற்செய்தி நிராகரிக்கப்பட்டது, எனினும் மரியாளியல் குறித்த செல்வாக்கு மிக்க ஆதாரமாக இந்நூல் விளங்குகிறது. [6]
இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர் யாக்கோபு (யோசேப்பின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்) இந்த நற்செய்தியை எழுதிய ஆசிரியராவார். திருத்தூதர் பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் இவரை திருத்தூதர் யாக்கோபு, இறைவனின் சகோதரர் (the Lord's brother) என்று குறிப்பிட்டுள்ளார் (கலாத்தியர் 1:19).