யதுவீர கிருட்டிணதத்த சாமராச உடையார்
From Wikipedia, the free encyclopedia
யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் (கன்னடம்: ಯದುವೀರ ಕೃಷ್ಣದತ್ತ ಚಾಮರಾಜ ಒಡೆಯರ್, ஆங்கில மொழி: Yaduveer Krishnadatta Chamaraja Wadiyar, பிறப்பு: மார்ச் 24, 1992) அல்லது பன்னிரெண்டாம் சாமராச உடையார் என்று அழைக்கப்படுபவர், உடையார் மரபின் 27ஆவது மற்றும் தற்போதய மைசூர் மகாராஜா. இவருக்கு முன் மன்னராக இருந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் வாரிசு இல்லாமல் திசம்பர் 2013 ல் இறந்தார். இதனால் மறைந்த மன்னரின் சகோதரி மகள் காயத்ரி தேவியின் மகள் லீலாதேவி என்கிற திரிபுரசுந்தரியின் மகனான யதுவீர் பிப்ரவரி 23, 2015 அன்று மகாராணி பிரமோதா தேவியால் தத்தெடுக்கப்பட்டு, யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் என்று பெயர் சூட்டப்பட்டு, மைசூர் மகாராஜாவின் வாரிசாக ஆக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார், ஆட்சி ...
யதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் | |
---|---|
மைசூர் மகாராஜா (பட்டம்) | |
ஆட்சி | 2015 - தற்போது |
முன்னிருந்தவர் | ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் |
மரபு | உடையார் மரபு |
தந்தை | ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் அரஸ் |
தாய் | திரிபுரசுந்தரி தேவி |
பிறப்பு | (1992-03-24)24 மார்ச்சு 1992 |
சமயம் | இந்து |
மூடு
மேலதிகத் தகவல்கள் மைசூர் அரசர்கள் ...
மூடு