மைக்கல்சன் குறுக்கீட்டுமானி
பயன்கள் முன்ரு / From Wikipedia, the free encyclopedia
ஒளியியல் குறுக்கீட்டு விளைவை கணக்கிட ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சன் கண்டறிந்த கருவியே மைக்கேல்சன் குறுக்கீட்டுமானி (Michelson interferometer) ஆகும். ஒரு ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளி அலைகளை இரண்டு கற்றைகளாகப் பிரிக்க கற்றைப் பிரிப்பான் (beam splitter) பயன்படுத்தப்படுகிறது. பின்னர் இரு கற்றைகளும் எதிரொளிக்கப்பட்டு, அவற்றின் வீச்சுகள் ஒன்றிணைக்கப்படும் போது குறுக்கீட்டு விளைவு உண்டாகிறது. இந்த குறுக்கீட்டு உருப்படிவம் ஒரு ஒளி மின் உணர்விக்கோ அல்லது நிழற்படகருவிக்கோ அனுப்பப்படுகிறது. இரு அலைகளின் வேறுபட்ட அலை நீளங்கள் அல்லது வெவ்வேறு ஒளி மூலங்கள் அல்லது சோதிக்கப்பட வேண்டிய பல்வேறு தனிமங்கள் ஆகியவற்றைக் கொண்டு குறுக்கீட்டுமானி பல வழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எட்வர்ட் மார்லேயும், ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சனும் இணைந்து பயன்படுத்திய மைக்கேல்சன்-மார்லே சோதனையில், இது பயன்படுத்தப்படுகிறது.[1] இச் சோதனை ஒளியின் ஊடகமாக கருதப்பட்ட ஒளிகடத்துமீதர் இருப்பதைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டது. இச் சோதனையின் முடிவில் ஒளிகடத்துமீதர் இல்லை என்பதும், ஒளி பரவ ஊடகம் ஏதும் தேவையில்லை என்பதும் நிருபிக்கப்பட்டது. பின்னர் மைக்கேல்சன் குறுக்கீட்டுமானி புவியீர்ப்பு அலைகள் இருப்பதை உறுதி செய்யப் பயன்பட்டது.[2] இச் சோதனையின் முடிவில் பொது சார்பியல் கொள்கை விளக்கப்பட்டது.