![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fc/Melukote_BNC.jpg/640px-Melukote_BNC.jpg&w=640&q=50)
மேல்கோட்டை
From Wikipedia, the free encyclopedia
மேல்கோட்டை (ஆங்கிலம்: Melukote ), (கன்னடம்: ಮೇಲುಕೋಟೆ)இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுக்காவில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். மேல்கோட்டையில், செல்வநாராயணர் கோயிலும், குன்றின் மீது யோகநரசிம்மர் கோயிலும் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மேல்கோட்டை, நாடு ...
மேல்கோட்டை | |
---|---|
நகரம் | |
![]() | |
நாடு | ![]() |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | மாண்டியா |
ஏற்றம் | 900 m (3,000 ft) |
மொழிகள் | |
• ஆட்சி மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 571431 |
தொலைபேசி குறியீட்டு எண் | 08232 |
வாகனப் பதிவு | KA-11 |
மூடு
பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், மைசூரிலிருந்து 51கி.மீ., பெங்களூரிருந்து 133கி.மீ தொலைவில் அமைந்துள்ள பசுமையான வயல்கள் சூழ்ந்த அழகிய மலை கிராமம். கர்நாடகத்தின் வைணவத்தலைமை பீடமாகக் கருதப்படும் இவ்வூருக்கு திருநாராயணபுரம் என்றும் பெயருண்டு.