மெகாரியன் ஆணை
மெகாரா மீது டெலியன் கூட்டணி விதித்த பொருளாதார தடைகள் / From Wikipedia, the free encyclopedia
மெகாரியன் உறுத்தாணை (Megarian Decree) என்பது பெலோபொன்னேசியன் போர் வெடிப்பதற்கு சற்று முன்னர் ஏதெனியன் பேரரசால் சு. கிமு 432 இல் மெகாரா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் தொகுப்பாகும். இந்த நடவடிக்கையானது வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாக பொருளாதாரத் தடையை முதலில் பயன்படுத்தபட்ட ஒன்றாக கருதப்படுகிறது.[1] இதற்கு காரணமாக கிரேக்க தெய்வமான டிமிடருக்கான புனித நிலமானன ஹைரா ஆர்காஸ்[2] எனப்படும் இடத்தில் மெகாரியர்கள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுவது, அவர்களைக் கண்டிக்க அவர்களின் நகரத்திற்கு அனுப்பப்பட்ட ஏதெனியன் அறிவிப்பாளர் கொல்லப்பட்டது மற்றும் ஏதென்சிலிருந்து தப்பி ஓடிவந்த அடிமைகளுக்கு அடைக்கலம் கொடுத்தது போன்றவை கூறப்பட்டன.[3] மெகாரியன் ஆணையால் மெகாராவானது டெலியன் கூட்டணிக்குள் எந்த துறைமுகத்திலும் வணிகம் செய்வதிலிருந்து முற்றிலும் தடுக்கப்பட்டது. இந்த ஆணையை மீறி ஏதென்சுக்குள் காலடி எடுத்து வைக்கும் மெகாரியன்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தடை அந்த நகரத்தை தனிமைப்படுத்தி அதன் பொருளாதாரத்தை பெரிதும் சேதப்படுத்தியது. பெலோபொன்னேசியப் போர் தொடங்க மெகாரியன் ஆணை செலுத்திய செல்வாக்கு இன்றுவரை மிகவும் விவாதிக்கப்படும் ஒரு விசயமாக உள்ளது.[4]