மூலா நாராயண சுவாமி
From Wikipedia, the free encyclopedia
மூலா நாராயண சுவாமி (Moola Narayana Swamy) ( சுமார் 1912 – 20 ஆகஸ்ட் 1950) ஓர் இந்தியத் தொழிலதிபரும், தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இராயலசீமை வங்கி வங்கி, இராயலசீமை டெக்ஸ்டைல்ஸ், கடப்பா செராமிக்ஸ், கடப்பா எலக்ட்ரிக் கம்பெனி, எண்ணெய் ஆலைகள், பால் கூட்டுறவுச் சங்கங்கள், சாராயம் ஒப்பந்தம், மார்க்கெட் யார்டுகள் போன்ற பல வணிகங்களை இவர் வைத்திருந்தார். இவர் "ஆந்திர பிர்லா" என்ற பெயராலும் அறியப்பட்டார். [1] [2]
விரைவான உண்மைகள் மூலா நாராயண சுவாமி, பிறப்பு ...
மூலா நாராயண சுவாமி | |
---|---|
பிறப்பு | அண். 1912 தாடிபத்திரி, சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | (1950-08-20)20 ஆகத்து 1950 (aged 38)[1] தாடிபத்திரி, சென்னை மாகாணம், இந்தியா |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் |
மூடு
இவர், இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான வாகினி ஸ்டுடியோவை நிறுவினார். இது அந்த நேரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட படபிடிப்பு அரங்கங்களில் ஒன்றாகும். பிற்காலத்தில், பொம்மிரெட்டி நாகிரெட்டி இந்த நிறுவனத்தினை வாங்கினார். பின்னர் இதை விஜயா வாகினி ஸ்டுடியோஸ் என பெயர் மாற்றம் செய்தார்.[3][4][5]