மூன்றாம் ராமா
சியாம் மன்னர் / From Wikipedia, the free encyclopedia
நாங்க்லாவ் அல்லது மூன்றாம் இராமா (ஆங்கிலம்:Rama III) (31 மார்ச் 1788 – 2 ஏப்ரல் 1851) சயாமின் சக்ரி முடியாட்சியின்மூன்றாவது மன்னர் ஆவார். 1824 ஜூலை 21 முதல் 1851 ஏப்ரல் 2 வரை இவர் ஆட்சி செய்தார். அவர் தனது தந்தை இரண்டாம் இராமாவிற்குப் பிறகு சயாமின் அரசராக ஆனார். மரபுகளின்படி அரசப்பதவிக்கான இவரது வாரிசுரிமை முறையற்றது.[1] ஏனென்றால் நாங்க்லாவ் இரண்டாம் இராமாவின் முறையற்ற மனைவி ஒருவருக்கு பிறந்த மகன் ஆவார். இவர் இரண்டாம் இராமரின் மனைவியான ஸ்ரீசுரியேந்திரா என்ற ராணிக்குப் பிறந்த முறையான மகனான இளவரசர் மோங்க்குட்டின் அரசுரிமையை பறித்ததாக மற்றவர்களால் கருதப்பட்டார். எவ்வாறாயினும், தாய்லாந்து முடியாட்சிக் கருத்தாக்கத்தின் கீழ், ஒரு மன்னர் மகா சம்மதாவைப் பின்பற்ற வேண்டும், மேலும் அவர் "மக்களால் தேர்ந்தெடுக்கப்படிருக்க வேண்டும்."[2]
நாங்க்லாவ் พระบาทสมเด็จพระนั่งเกล้าเจ้าอยู่หัว | |
---|---|
மூன்றாம் இராமா | |
![]() | |
ஆட்சிக்காலம் | 21 சூலை 1824 – 2 ஏப்ரல் 1851 |
பட்டாபிஷேகம் | 21 சூலை 1824 |
பிறப்பு | (1788-03-31)31 மார்ச்சு 1788 பெரிய அரண்மனை, தாய்லாந்து, பேங்காக், தாய்லாந்து |
இறப்பு | 2 ஏப்ரல் 1851(1851-04-02) (அகவை 63) பெரிய அரண்மனை, தாய்லாந்து, பேங்காக், தாய்லாந்து |
குழந்தைகளின் பெயர்கள் | பல மனைவிகள் மூலம் 51 குழந்தைகள் |
மதம் | பௌத்தம் |
மூன்றாம் இராமாவின் ஆட்சியின் போது லாவோடியன் கிளர்ச்சியைக் குறைப்பதன் மூலம் சயாமின் இராணுவ மேலாதிக்கத்தை நிறுவினார். மேலும் சயாமிய-வியட்நாமியப் போர் (1831-34) மற்றும் சயாமி-வியட்நாமியப் போருக்காக கம்போடியாவில் போரிட்டது போன்றவற்றிகாகவும் மூன்றாம் இராமா அறியப்படுகிறார்.