முத்து குமாரசுவாமி
From Wikipedia, the free encyclopedia
சேர் முத்து குமாரசுவாமி (Mutu Coomaraswamy, சனவரி 23, 1833 - மே 4, 1879) பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டவாக்கப் பேரவையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பதவி வகித்துச் சேவை புரிந்தவர். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவரின் தந்தை கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி சட்டவாக்கப் பேரவையின் முதலாவது தமிழ்ப் பிரதிநிதியாக இருந்தவர். ஆசியாவில் பிறந்து முதன் முதல் "சேர்" பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் முத்துக்குமாரசுவாமி[1]. சேர் முத்துக் குமாரசுவாமியின் புதல்வர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி ஆவார்.
விரைவான உண்மைகள் முத்து குமாரசுவாமி, இலங்கை சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினர் ...
முத்து குமாரசுவாமி | |
---|---|
![]() | |
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினர் | |
பதவியில் 1862–1879 | |
முன்னையவர் | தெரியவில்லை |
பின்னவர் | பொன். இராமநாதன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சனவரி 23, 1833 |
இறப்பு | மே 4, 1879(1879-05-04) (அகவை 46) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
துணைவர் | கிளே பீபி |
பிள்ளைகள் | ஆனந்த குமாரசுவாமி |
பெற்றோர் | ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி |
வேலை | அரசியல்வாதி, வழக்கறிஞர் |
மூடு