From Wikipedia, the free encyclopedia
முதல் சீதனம் (Muthal Seethanam) 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஈரோடு சௌந்தர் எழுதி இயக்கினார். இப்படத்தை ஆர். பி. சௌத்ரி தயாரித்தார். இப்படத்தில் சிவா மற்றும் தேவி மீனாட்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1992 ஆகஸ்ட் 14 அன்று வெளியிடப்பட்டது.
முதல் சீதனம் | |
---|---|
இயக்கம் | ஈரோடு சௌந்தர் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
கதை | ஈரோடு சௌந்தர் |
இசை | சௌந்தர்யன் |
நடிப்பு | சிவா தேவி மீனாட்சி |
ஒளிப்பதிவு | கே. ராம் சிங் |
படத்தொகுப்பு | கே. தணிக்காசலம் |
கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
வெளியீடு | 14 ஆகத்து 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு சௌந்தர்யன் இசையமைத்தார். பாடல் வரிகளை காளிதாசன், சௌந்தர்யன் மற்றும் இத்திரைப்பட இயக்குனர் ஈரோடு சௌந்தர் ஆகியோர் எழுதியுள்ளனர்.[1][2]
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
---|---|---|---|
1 | "எட்டு மடிப்பு சேல" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
2 | "கேளு கேளு" | மனோ | |
3 | "ஓ நெஞ்சமே உயிரே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | |
4 | "பட்டு வண்ண" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மின்மினி | |
5 | "சுத்த சம்பா" | மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.