மு. பரஞ்சோதி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
மு. பரஞ்சோதி (M. Paranjothi) ஓர் இந்திய அரசியல்வாதியும் திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினரான இவர், 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
2011 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மேற்குத் தொகுதிக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் பரஞ்சோதி வெற்றி பெற்றார். அந்த ஆண்டு நவம்பரில் ஜெயலலிதா அமைச்சரவையில் மாற்றம் செய்ததன் விளைவாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த எசு.பி.சண்முகநாதனும், தகவல், சட்டம் மற்றும் செந்தமிழன் ஆகிய இருவரின் துறைகளும் மு. பரஞ்சோதிக்கு வழங்கப்பட்டன.[4]