மீமாஞ்சம்
From Wikipedia, the free encyclopedia
இந்திய மெய்யியலில், மீமாஞ்சம் அல்லது மீமாம்சம் அல்லது மீமாம்சை (Mīmāṃsā, சமக்கிருதம்: मीमांसा), என்பது வேதத்தை ஏற்கும் தத்துவப் பிரிவுகளில் ஒன்றாகும். இத்தத்துவப் பிரிவை நிறுவியர் ஜைமினி (கி. மு. 200). இது மீமாம்ச சூத்திரங்களைக் அடிப்படையாக கொண்டது.[1] [2]
மீமாம்ச சூத்திரங்களுக்கு சபர சுவாமி (கி. மு. 57) விளக்க உரை எழுதியுள்ளார். இதை பூர்வ மீமாம்சம் (கர்ம காண்டம்) என்றும் உத்தர மீமாம்சம் (ஞான காண்டம்) என்று இரு காண்டங்களாக பிரித்துள்ளனர். பூர்வ மீமாம்சம் நான்கு வேதங்களுக்குப் பொருள் கூறும். உத்தர மீமாம்சத்தை தொகுத்தவர் வியாசர். நான்கு வேதங்களின் இறுதியில் உள்ள வேதாந்தங்களான உபநிடதங்களை உத்தர மீமாம்சம் என்பர்.