![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/7/7d/Meenakshisundarampillai.jpg/640px-Meenakshisundarampillai.jpg&w=640&q=50)
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
ஒரு தமிழ் புலவர், ஆசிரியர் / From Wikipedia, the free encyclopedia
மீனாட்சிசுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 6, 1815 - பிப்ரவரி 1, 1876; திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு) சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். சீர்காழியில் முன்சீபாகப் பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டிக் ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார்.
விரைவான உண்மைகள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பிறப்பு ...
மீனாட்சிசுந்தரம் பிள்ளை | |
---|---|
![]() | |
பிறப்பு | (1815-04-06)ஏப்ரல் 6, 1815 திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 1, 1876(1876-02-01) (அகவை 60) |
தலைப்புகள்/விருதுகள் | தமிழ்ப் புலவர் |
தத்துவம் | சைவ சமயம் |
மூடு