உ. வே. சாமிநாதையர்
தமிழ்ப் பதிப்பியக்கத்தில் பெரும்பணி ஆற்றியவர் / From Wikipedia, the free encyclopedia
உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்ற உ. வே. சாமிநாதையர் (19 பெப்ரவரி 1855 – 28 ஏப்ரல் 1942, சுருக்கமாக உ.வே.சா) தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார். இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா. அவர்கள் 90-இற்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-இற்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.[1]
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் உ.வே. சாமிநாதையர், பிறப்பு ...
உ.வே. சாமிநாதையர் | |
---|---|
![]() | |
பிறப்பு | (1855-02-19)19 பெப்ரவரி 1855 சூரியமூலை, தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம் |
இறப்பு | ஏப்ரல் 28, 1942(1942-04-28) (அகவை 87) |
பணி | பதிப்பாளர் |
அறியப்படுவது | அழிநிலை நூல்களைப் பதிப்பித்தமை |
சமயம் | இந்து சமயம் |
மூடு