மின்ஹஜ்-இ சிராஜ் ஜுஸ்ஜனி
From Wikipedia, the free encyclopedia
மின்ஹஜ் அல்-சிராஜ் ஜுஸ்ஜனி (பிறப்பு 1193) என்பவர் ஒரு 13ஆம் நூற்றாண்டு பாரசீக வரலாற்றாளர்[1] ஆவார். இவர் கோர் பகுதியில் பிறந்தார்.[2] இவரது முழுப் பெயர் மின்ஹஜ்-அல்-தின் அபு அமர் உதுமான் இப்னு சிராஜ்-அல்-தின் முகம்மத் ஜுஸ்ஜனி ஆகும்.
விரைவான உண்மைகள் மின்ஹஜ் அல்-சிராஜ் ஜுஸ்ஜனி, பிறப்பு ...
மின்ஹஜ் அல்-சிராஜ் ஜுஸ்ஜனி | |
---|---|
பிறப்பு | 1193 கோர், கோரி அரசமரபு |
இறப்பு | 1266க்கு பிறகு மம்லூக் இந்தியா |
பணி | வரலாற்றாளர் |
பணியகம் | கோரி அரசமரபு மம்லூக் சுல்தானகம் |
மூடு
1227இல் ஜுஸ்ஜனி உச் நகரத்திற்கும் பிறகு தில்லிக்கும் இடம்பெயர்ந்தார்.[3] வட இந்தியாவில் தில்லியின் மம்லூக் சுல்தானகத்திற்கு முதன்மை வரலாற்றாளர் ஜுஸ்ஜனி தான்.[4] இவர் கோரி அரசமரபைப் பற்றி எழுதியுள்ளார்.[5] இவர் தபகத்-இ நசீரி (1260) நூலை தில்லியின் சுல்தான் நசீருதீன் மஹ்முத் ஷாவிற்காக எழுதியுள்ளார்.[6] இந்நூல் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் 1266க்கு பிறகு இறந்தார்.