மிதிலை, நேபாளம்
From Wikipedia, the free encyclopedia
மிதிலை (Mithila) (நேபாளி: मिथिला राज्य; மைதிலி : মিথিলা রাজ্য) மைதிலி மொழி பேசும் தெற்கு நேபாளத்தின் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்குத் தராய் சமவெளி பகுதியாகும். மிதிலையில் மைதிலை, நேபாள மொழிகள் பேசும் மதேசி மக்கள் பெரும்பான்மையான வாழ்கின்றனர். மிதிலையின் முக்கிய நகரம் ஜனக்பூர் ஆகும். மிதிலை பண்டைய விதேக நாட்டின் தலைநகராக விளங்கியது.
நேபாள மிதிலை மக்கள், இந்தியாவின் மிதிலை மக்களுடன், திருமண உறவின் மூலம் பண்பாடு மற்றும் நாகரீகத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.[1]நேபாள நாட்டின் மிதிலையையும், இந்தியாவின் மிதிலையையும் ஒன்றிணைத்து, மிதிலை பிரதேசத்தைத் தனிநாடாக அறிவிக்கக் கோரி மைதிலி மொழி பேசும் மக்கள் பல்லாண்டுகளாகப் போராடி வருகின்றனர்.[2]