![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/India-locator-map-blank.svg/langta-640px-India-locator-map-blank.svg.png&w=640&q=50)
மால்கான்கிரி
From Wikipedia, the free encyclopedia
மால்கான்கிரி (Malkangiri, ஒரியா மொழி:ମାଲକାନଗିରି) இந்திய மாநிலம் ஒடிசாவின் மல்கான்கிரி மாவட்டத்தின் தலைநகரமும் தெரிந்தெடுக்கப்பட்ட பகுதியும் (notified area committee) ஆகும். மல்கான்கிரியில் 1965ஆம் ஆண்டு முதல் தண்டகாரண்ய திட்டத்தின் கீழ் வங்காளதேச அகதிகள் மறுவாழ்வளிக்கப்படுகின்றனர். 90களின் துவக்கத்தில் ஈழத்தமிழர் பிரச்சினையை அடுத்து புலம்பெயர்ந்த சில இலங்கைத் தமிழ் அகதிகளும் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்று பெரும்பாலனவர்கள் திரும்பிவிட்டாலும் இன்னமும் சிலர் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இது மாநிலத்தின் நக்சலைட் இயக்கம் தீவிரமாக இயங்கும் மாவட்டமாக விளங்குகிறது. 2011ஆம் ஆண்டு பெப்ரவரியில் மல்கான்கிரி மாவட்ட ஆட்சியர் நவீல் கிருஷ்ணாவும் பொறியாளர் பவித்ர மஜியும் நக்சலைட்களால் கைப்பற்றப்பட்டு பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.[1]
மால்கான்கிரி | |||||
— நகரம் — | |||||
அமைவிடம் | 18°21′N 81°54′E | ||||
நாடு | ![]() | ||||
மாநிலம் | ஒடிசா | ||||
மாவட்டம் | மால்கான்கிரி மாவட்டம் | ||||
ஆளுநர் | கணேசி இலால் | ||||
முதலமைச்சர் | நவீன் பட்நாய்க் | ||||
மக்களவைத் தொகுதி | மால்கான்கிரி | ||||
மக்கள் தொகை | 23,110 (2001[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
• 178 மீட்டர்கள் (584 அடி) | ||||
குறியீடுகள்
|