மனுதரும சாத்திரம்
From Wikipedia, the free encyclopedia
மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.[1] இந்நூல் மீண்டும் 1882-இல் ஜார்ஜ் புஃலர் என்பவர் ஆங்கில மொழியில் வெளியிட்டார்.[2] இந்நூலை திருலோக சீதாராம் என்பவர் தமிழ் மொழியில் பெயர்த்துள்ளார்.
இது தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது[சான்று தேவை]. இந்து தத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களையும் பெண்களை மிக இழிவாகவும் போகப் பொருளாகவும் வலியுறுத்தும் மேட்டுக்குடியினரின் உத்தியாக இதனை விமர்சிப்பவர்களும் உள்ளனர்.
இந்நூலுக்கு மானவ தர்ம சாஸ்திரம் (சமசுகிருதம்:मानवधर्मशास्त्र) என்ற பெயரும் உள்ளது. அதற்கு மானுட அறம் என்பது பொருளாகும்.