மதுரை நாயக்கர்
From Wikipedia, the free encyclopedia
மதுரை நாயக்கர்கள், (Madurai Nayak) மதுரையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் 1529 தொடக்கம், 1736 வரை ஆண்டார்கள்.[1] தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பலிஜா[2] இனக்குழுவைச் சேர்ந்த இவர்கள் 14ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். நிர்வாக முறைகளில் புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் மதுரை நாயக்கர்கள் மக்களோடு தங்கள் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டனர். இவற்றுள் தங்கள் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து, நிர்வாகம் மேற்கொண்டது முக்கியமானது.[3]
விரைவான உண்மைகள் மதுரை நாயக்க மன்னர்கள், தலைநகரம் ...
மதுரை நாயக்க மன்னர்கள் | |
---|---|
1529–1736 | |
தலைநகரம் | மதுரை (1529–1616) திருச்சிராப்பள்ளி (1716–1736) |
பேசப்படும் மொழிகள் | தெலுங்கு, தமிழ் |
அரசாங்கம் | ஆளுநர்கள், பின்னர் முடியாட்சி |
வரலாறு | |
• தொடக்கம் | 1529 |
• முடிவு | 1736 |
மூடு
விரைவான உண்மைகள்
முன்ஆட்சி | பின்ஆட்சி
|
பிரிவு
|
மூடு