மகாராஷ்டிர வரலாறு
From Wikipedia, the free encyclopedia
மகாராட்டிர வரலாறு தோராயமாக கி.மு 4 ஆம் நூற்றாண்டு காலகட்டம்வரை தெரியவருகிறது. கி.மு 4 ஆம் நூற்றாண்டு முதல் 875 வரையிலான காலகட்டம்வரை இப்பகுதியில் மகாராஸ்திரி பிராகிருதம் மொழியின் மேலாதிக்கம் கொண்ட மொழிகளின் ஆதிக்கத்தில் இருந்தன. இந்த மகாராஸ்திரி பிராகிரத்தில் இருந்தே மராத்தி மொழி ஒன்பதாம் நூற்றாண்டுக்கு மேல் உருவானது. மராத்தி மொழியின் பழமையான கல்வெட்டு தற்கால கர்நாடகத்தில் உள்ள சரவணபெலகுலாவில் உள்ள பாகுபளி சிலையின் அடிப்பகுதியில் உள்ளது. காலப்போக்கில், மகாராட்டிரா என்ற பகுதியாக அபரண்டா, விதர்பா, முலாக், அஷ்மக் அஸ்மகம், குந்தால் ஆகிய பகுதிகளும் அடங்கின. மேலும் நாகா, முண்டா மற்றும் பில் மக்கள் போன்ற பழங்குடி சமூகங்கள் வாழ்ந்த இப்பகுதி பண்டைய காலங்த்தில், தண்டகாரண்யம் என அழைக்கப்பட்டது.