மகா மண்டபம்
From Wikipedia, the free encyclopedia
மகா மண்டபம் என்பது இந்து சமயக் கோயில்களில் அர்த்த மண்டபத்தை அடுத்து இறைத் திருமேனிக்கு முன் பலரும் கூடும் வகையில் அமைக்கப்படும் பெரிய மண்டபமாகும். [1] இம்மண்டபம் வேத மண்டபம் என்றும் அறியப்படுகிறது. இந்த மகா மண்டபம் கோவிலின் அழகை கூட்டுவதற்கும், பக்தர்கள் இறைவனை வணங்க ஏதுவான நிழல் தரவும் அமைக்கப்படுகின்றன.
கருவரை மற்றும் அர்த்த மண்டபம் மட்டுமே அமைந்த கோவில்களில் பிற்காலத்தில் பக்தர்களால் மகா மண்டபங்கள் கட்டப்படுகின்றன. இந்த மண்டபங்களுக்கு தனியாக திறப்பு விழாவும் செய்வதுண்டு. [2]