பொட்டி சிறீராமுலு
இந்திய விடுதலைப் போராட்டத் தெலுங்கர் / From Wikipedia, the free encyclopedia
பொட்டி சிறீராமுலு (ஆங்கிலத்தில் Potti Sreeramulu, தெலுங்கில் పొట్టి శ్రీరాములు,1901 மார்ச் 16 - 15 டிசம்பர் 1952) ஒரு இந்திய விடுதலைப்போராட்ட வீரராவார். காந்தியின் அகிம்சை வழியைப் பின்பற்றியவர். தனது வாழ்வின் பெரும்பகுதியை தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாடுபடுவதில் செலவிட்டவர். சிறீராமுலு ஆந்திர மாநிலம் உருவாகத் தன்னையே தியாகம் செய்ததால் ஆந்திர மாநிலத்தவர்களால் அமரஜீவி என்று போற்றப்பட்டார். அவர் சென்னை மாகாணத்தில் உள்ள தெலுங்கு மக்கள் வாழும் பகுதிகளைப் பிரித்துத் தனிமாநிலமாக்க, துவக்கிய உண்ணாவிரதப் போராட்டத்தால் பிரபலமானார். அவரது மரணம் பெரும் கலவரத்துக்குக் காரணமானது. இதனால் அப்போதைய இந்தியப் பிரதமரான சவகர்லால் நேரு ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
விரைவான உண்மைகள் பொட்டி சிறீராமுலு, பிறப்பு ...
பொட்டி சிறீராமுலு | |
---|---|
பிறப்பு | (1901-03-16)16 மார்ச்சு 1901 சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 15 திசம்பர் 1952(1952-12-15) (அகவை 51) சென்னை, இந்திய ஒன்றியம் |
இறப்பிற்கான காரணம் | உண்ணாவிரதத்தால் உயிரிழந்தார் |
கல்லறை | சென்னை |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | அமரஜீவி |
சமயம் | இந்து |
பெற்றோர் | குருவையா, மகாலட்சுமி அம்மா |
மூடு