பைரத் பௌத்த தொல்லியல் களம்
From Wikipedia, the free encyclopedia
பைரத் பௌத்த தொல்லியல் களம் (Bairat Temple) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் விராட்நகர் தாலுகாவில் அமைந்த பைரத் எனும் ஊரின் மலை மீது அமைந்த அசோகரின் கல்வெட்டும், வட்ட வடிவ பௌத்த விகாரையும், தூபிகளும் கொண்ட கிமு 3-ஆம் நூற்றாண்டின் தொல்லியல் களம் ஆகும்.[1][2] [3] இத்தொல்லியல் களம் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.[4][5] அசோகர் காலத்தில் நிறுவப்பட்ட வட்ட வடிவில் அமைந்த விகாரையின் நடுப்பகுதியில் தூபி நிறுவப்பட்டுள்ளது. [6][4] இந்த விகாரையின் அருகே அசோகர் நிறுவிய இரண்டு சிறு பாறைக் கல்வெட்டுக்கள் உள்ளது. [6]தற்போது பைரத் தொல்லியல் களத்தில் இருந்த வட்ட வடிவ விகாரையும், தூபியும் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது.
விரைவான உண்மைகள் பைரத் பௌத்த தொல்லியல் களம், அடிப்படைத் தகவல்கள் ...
பைரத் பௌத்த தொல்லியல் களம் | |
---|---|
சிதிலமடைந்த வட்ட வடிவ பைரத் பௌத்த விகாரை | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 27.417116°N 76.16229°E / 27.417116; 76.16229 |
சமயம் | பௌத்தம் |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | ஜெய்ப்பூர் |
மாநகராட்சி | பைரத் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
நிலை | சிதிலமடைந்துள்ளது |
செயற்பாட்டு நிலை | இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது |
மூடு