பேரானந்த சித்தியார்
From Wikipedia, the free encyclopedia
பேரானந்த சித்தியார் [1] என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சித்தாந்த நூல். இதில் 108 விருத்தங்கள் உள்ளன. ஆனந்தம் என்பது உலகியல் மகிழ்ச்சி. பேரானந்தம் என்பது மறைபொருள் பற்றிய உண்மை உணர்வில் தோன்றும் மகிழ்ச்சி. இந்தப் பேரானந்த மகிழ்வை அடையும் வழிகளைக் கூறுவது இந்த நூல்.
- திருப்புன்முறுவல்
- மௌன முத்திரை
- பிடித்த முத்திரை
- கன்மக் கழற்றி
- மாயைக் கழற்றி
- ஆணவக் கழற்றி
- போதக் கழற்றி
- அருட்கழற்றி
- பொருட்கழற்றி
- முத்தி கழற்றி வினா மொழி
என்னும் 10 தலைப்புகளில் இந்த நூல் அமைந்துள்ளது.