பெர்னாவோ நுனிஸ்
From Wikipedia, the free encyclopedia
பெர்னாவோ நுனிஸ் (Fernao Nuniz) ஒரு போத்துக்கீசப் பயணியும், வரலாற்று எழுத்தாளரும், குதிரை வணிகரும் ஆவார். 1535 - 1537 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அக்காலத்தில் விசயநகரப் பேரரசின் தலைநகராக இருந்த விசயநகரத்தில் தங்கி இருந்தார். இவருடைய எழுத்துக்கள் அக்காலத்தின் விசயநகரம் பற்றிய பல சுவையான விபரங்களைத் தருகின்றன[1] பாரிய அரண்கள், காவல் கோபுரங்கள், பாதுகாப்புச் சுவர்கள் போன்றவற்றின் கட்டுமான வேலைகள் குறித்த தகவல்களும் இவற்றுள் அடங்குகின்றன. இவற்றில் இருந்து இத் தலைநகரத்தின் எல்லைகள் இரண்டாம் புக்காராயர், முதலாம் தேவராயர் ஆகியோர் காலத்தில் விரிவாக்கப்பட்டது தெரியவருகிறது.