ம. ப. பெரியசாமித்தூரன்
எழுத்தாளர், இசைப்பாடலாசிரியர், தமிழின் முதல் கலைக் களஞ்சியத்தின் ஆசிரியர் / From Wikipedia, the free encyclopedia
பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன் (செப்டம்பர் 26, 1908 - சனவரி 20, 1987) ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். [1]பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் கருநாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும் சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்; மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்; பதிப்புப் பணிகளும் செய்துள்ளார். இவரின் நூல்கள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
விரைவான உண்மைகள் ம. ப. பெரியசாமித்தூரன், பிறப்பு ...
ம. ப. பெரியசாமித்தூரன் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 26, 1908 ஈரோடு, தமிழ்நாடு, ![]() |
இறப்பு | சனவரி 20, 1987 (அகவை 79) சென்னை, தமிழ்நாடு, ![]() |
கல்வி | பி.ஏ. (சென்னைப் பல்கலைக்கழகம் (தூய கணிதம் மற்றும் வானியல்) |
பட்டம் | பத்மபூஷன் |
பெற்றோர் | பழனிவேலப்ப கவுண்டர், பாவை (பாவாத்தாள்) |
வாழ்க்கைத் துணை | காளியம்மாள் |
பிள்ளைகள் | சாரதாமணி, வசந்தா, விஜயலட்சுமி, சுதந்திரக்குமார் |
மூடு