பெத்லகேமின் விண்மீன்
From Wikipedia, the free encyclopedia
கிறித்தவப் பாரம்பரியப்படி பெத்லகேமின் விண்மீன் அல்லது கிறித்துமசு விண்மீன்[1] என்பது கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும். இவ்விண்மீன் விவிலியத்தில் ஆண்டவரின் விண்மீன் என அழைக்கப்படுகின்றது.[2]
பல கிறித்தவர்கள் இந்த விண்மீன் மெசியாவின் வருகையின் முன் அடையாளமாகக் காண்கின்றனர். இந்நிகழ்வு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா என பல கிறித்தவப்பிரிவுகளில் கொண்டாடாப்படுகின்றது.
பல வானியல் அறிஞர்கள் இந்த விண்மீன் மீயொளிர் விண்மீன் வெடிப்பு, வால்வெள்ளி அல்லது வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றை ஒன்று கடக்கும் நிகழ்வாக இருக்கலாம் என என்னுகின்றனர்.[3][4]