பூட்டானின் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
பூட்டானின் வரலாறு துவக்கத்தில் தொன்மவியலை அடிப்படையாகக் கொண்டு தெளிவில்லாது உள்ளது. இங்குள்ள சில கட்டமைப்புக்களைக் கொண்டு இங்கு கி.பி 2000ங்களிலேயே மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன. செவிவிழிக் காதைப்படி இதனை கூச் பிகாரின் அரசர் சங்கல்திப் கி.பி ஏழாம் நூற்றாண்டுகளில் ஆண்டார்.[1] ஆனால் இங்கு 9ஆம் நூற்றாண்டில் திபெத்திய பௌத்தம் அறிமுகமானபிறகே வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கின்றன. அந்த நூற்றாண்டில் திபெத்தில் நடந்த கொந்தளிப்புகளால் துரத்தப்பட்ட பல துறவிகள் பூட்டானுக்கு வந்து குடியேறினர். 12ஆம் நூற்றாண்டில் துருக்பா காக்யூபா பள்ளி நிறுவப்பட்டது. இது திபெத்திய காக்யூபா பள்ளியின் கிளையாகும். இன்றுவரை இது பூட்டானின் பௌத்த சமயத்தில் முதன்மை இடம் பெற்றுள்ளுள்ளது. நாட்டின் அரசியல் வரலாறு இந்த சமய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நாட்டில் உள்ள பல பௌத்த பள்ளிகள் மற்றும் விகாரங்களுக்கிடையே இருந்த தொடர்பாடலே அரசியலை முன்னிறுத்தியது.[2]