புல்மோட்டை
From Wikipedia, the free encyclopedia
புல்மோட்டை (Pulmoddai) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரத்தில் இருந்து 55 கி.மீ துாரத்தில் நிலாவெளிப் பாதையின் முடிவிலும், அனுராபுரத்தில் இருந்து 105 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. நீா் நில வளங்களைக் கொண்ட இப்பிரதேசத்தின் நுழைவாயில் யான் ஓயா நதியினாலும் அதன் வனப்பினாலும் அழகு படுத்தப்படுகின்றது. வடக்கே கோகிளாய் வாவியும் அமைந்துள்ளது. இச்சிறிய கிராமத்தில் 15,000 க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இப்பிரதேச மக்கள் மீன் பிடி, இறால் பிடித்தல் மற்றும் விவசாயம் போன்ற தொழில்களைப் பிரதானமாகக் கொண்டுள்ளனர். இங்கு இலங்கையின் முக்கிய வளங்களின் ஒன்றான இல்மனைட் தொழிற்சாலையம், அரிசிமலை கடற்கரையும் அமையப் பெற்றதனால் அதிகமான உல்லாசப் பயணிகளை கவரும் இடமாகக் காணப்படுகின்றது.