வீமன்
From Wikipedia, the free encyclopedia
வீமன், அல்லது பீமன் அல்லது பீமசேனன், மகாபாரதத்தில் வரும் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் வாயு பகவானுக்கும் குந்திக்கும் பிறந்தவர். இவர் மிகுந்த வலிமையுடையவர்.மகாபாரத்தில் பெரும் பலசாலியாக இவர் காணப்படுகின்றார்.பகாசுரன்,இடும்பன்,கிர்மீரகன்,ஜராச்சந்தன்,கீசகன், துரியோதனன்,துச்சாதனன் ஆகிய பெரும் பலசாலிகளையே கொன்று ஒழித்தவர். குருக்ஷேத்திர போரில் அருச்சுனனுக்கு அடுத்தபடியாக கௌரவ சேனைக்கு பெரும் அழிவை ஏற்படுத்தினார்.கௌரவர்கள் நூறு பேரும் ஒன்றாக வந்தாலும் கூட இவரை வெல்ல முடியாது.கௌரவர்கள் நூறு பேரையும் ஒற்றை ஆளாக கொன்றவர் இவரே.இவர் கிரேக்க புராணங்களில் வரும் மாவீரன் ஹெர்குலஸூக்கு நிகராக கருதப்படுகின்றார். இவர் காட்டில் வசித்த பொழுது இடும்பி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் கடோற்கஜன்.இவனும் தன் தந்தையைப் போல பெரும் பலசாலியாகத் திகழ்ந்தான்.மேற்கு இந்தியாவில் பாயும் பீமா ஆறானது இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. பர்பரிகன் இவரது பேரன்.
இந்து மதம் புராணங்களில் வீமன் பாண்டவர்களில் இரண்டாவதாக பிறந்தவர். வீமனின் வலிமையை சித்தரிக்கும் பல நிகழ்வுகளை மகாபாரதம் விவரிக்கிறது. குருசேத்ரப் போரில் நூறு கௌரவ சகோதரர்களைக் கொன்றதற்கு வீமன் பொறுப்பாவார். ஏறக்குறைய 10,000 யானைகளின் உடல் வலிமை அவருக்கு இருப்பதாக கருதப்பட்டது.