பிரத்தியங்கிரா தேவி
From Wikipedia, the free encyclopedia
பிரத்தியங்கிரா தேவி (சமசுகிருதம்: प्रत्यङ्गिरा; Prātyangira, அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி: / 'Pratyangira/) சக்தியின் வடிவமாகக் கருதப்படும் இந்து சமயப் பெண் தெய்வம் ஆவார். பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். இப்பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.
விரைவான உண்மைகள் பிரத்தியங்கிரா தேவி, வேறு பெயர்கள் ...
பிரத்தியங்கிரா தேவி | |
---|---|
A depiction of Prathyangira | |
வேறு பெயர்கள் | நரசிம்மி , அதர்வண காளி |
தமிழ் எழுத்து முறை | பிரத்யங்கிரா |
எழுத்து முறை | प्रत्यङ्गिरा |
வகை | தேவி, சக்தியின் வடிவம் |
ஆயுதம் | திரிசூலம், சங்கு (இசைக்கருவி), சக்கரம், கதை |
துணை | பீக்ஷன பைரவர் |
நூல்கள் | அதர்வண வேதம் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/Pratyangira_temple_4.jpg/320px-Pratyangira_temple_4.jpg)
இவர் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் என கருதப்படுகிறார்.