![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2f/Perunchithiranar-poet-TamilNadu_%2528cropped%2529.jpg/640px-Perunchithiranar-poet-TamilNadu_%2528cropped%2529.jpg&w=640&q=50)
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தமிழ்த்தேசியத்தந்தை / From Wikipedia, the free encyclopedia
"பாவலரேறு" பெருஞ்சித்திரனார் (10 மார்ச் 1933 – 11 சூன் 1995) தமிழ்நாட்டைச் சேர்ந்த தனித்தமிழ் அறிஞர், புலவர், இதழாளர் மற்றும் பெரியாரிய, பொதுவுடைமை, தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளர் ஆவார். தன் ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியில் கொய்யாக்கனி (1956), கனிச்சாறு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படைப்புகளை இயற்றினார். "மொழிஞாயிறு" என அறியப்படும் ஞா.தேவநேயப் பாவாணருடன் இணைந்து தென்மொழி இதழைத் தொடங்கி நடத்தினார்.
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
---|---|
![]() | |
பிறப்பு | இராசமாணிக்கம் 10 மார்ச் 1933 சமுத்திரம், சேலம் மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 11 சூன் 1995(1995-06-11) (அகவை 62) மதராசு (தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | துரை |
பணி | எழுத்தாளர், புலவர், தனித்தமிழ் ஆர்வலர் |
தாக்கம் செலுத்தியோர் | திருவள்ளுவர் மறைமலை அடிகளார் பெரியார் பாரதிதாசன் தேவநேயப் பாவாணர் வை. பொன்னம்பலனார் |
பின்பற்றுவோர் | மகிபை பாவிசைக்கோ ப. அருளி |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | பொற்கொடி தேன்மொழி பூங்குன்றன் பொழிலன் சித்திரச்செந்தாழை பிறைநுதல் |
உறவினர்கள் | [மருமகன்கள்] இறைக்குருவன் ப. அருளி ஆறிறைவன் கி. குணத்தொகையன் |
குமுகாய - அரசியல் களத்தில் சாதி எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, நெருக்கடி நிலை எதிர்ப்பு, தமிழீழ ஆதரவு, தனித் தமிழ்நாடு ஆதரவு ஆகிய நிலைகளில் செறிவுடன் பணியாற்றினார்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராகக் கருதப்படுகிறார் பெருஞ்சித்திரனார். இவர் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. "தமிழ்த்தேசியத்தின் தந்தை" எனவும் தமிழ்த்தேசியர்களால் போற்றப்படுகி்றார். பல்வேறு இயக்கங்களும் கல்வி அறக்கட்டளைகளும் பெருஞ்சித்திரனாரின் வழிமரபினரால் நடத்தப்படுகின்றன.