பார்சுவநாதர்
From Wikipedia, the free encyclopedia
பார்சுவநாதர் அல்லது பார்ஸ்வ (Parshvanatha) (Pārśvanātha) or (Pārśva), மகாவீர்ருக்கு முந்தைய சமண சமயத்தின் 23ஆவது தீர்த்தங்கரர் ஆவார்.[1][2] இவர் பொ.ஊ.மு. 877-777-ஆம் ஆண்டில் வாழ்ந்த சமண சமயத் தலைவர்.[3][4][5] பகவான் பார்சுவநாதர், இச்வாகு குலத்தில், காசி நாட்டு அரசன் அஸ்வசேனா - ராணி வாமா தேவிக்கு வாரணாசியில் பிறந்தவர்.[6] முப்பது வயதில் உலக இன்பத்தை துறந்து துறவி ஆனார்.[7] பார்சுவநாதர் தொடர்ந்து 84 நாட்கள் கடும் தவம் இயற்றி ஞானம் அடைந்தார்.[8] தனது 100ஆவது அகவையில் முக்தி அடைந்தார். சமணர்களால் மிகவும் போற்றத்தக்கவராயிருந்தார்.[9][10]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Tirthankara_Parsvanatha_Linden-Museum_SA_01727_L.jpg/640px-Tirthankara_Parsvanatha_Linden-Museum_SA_01727_L.jpg)