பாக்மதி ஆறு
From Wikipedia, the free encyclopedia
பாக்மதி ஆறு (Bagmati River) , நேபாள நாட்டின் சிவபுரி மலைகளில் வாக்துவார் எனுமிடத்தில் உற்பத்தியாகி, காத்மாண்டு சமவெளியில் பாய்ந்து, காட்மாண்டு நகரத்தையும், பதான் நகரத்தையும் பிரிக்கிறது. பாக்மதி ஆறு நேபாளத்தின் புனித ஆறாக இந்துக்களும், பௌத்தர்களும் கருதுகிறார்கள். பாக்மதி ஆற்றின் கரையில், காத்மாத் சமவெளியில் பசுபதிநாத் கோவில் உள்ளிட்ட பல இந்து மற்றும் பௌத்த சமய வழிபாட்டுத் தலங்கள் உள்ளது.
விரைவான உண்மைகள் நாடு, மாநிலம் ...
பாக்மதி ஆறு (बागमती खुसी, बागमती नदी) | |
River | |
பாக்மதி ஆற்றின் கரையில் பசுபதிநாத் கோவில் | |
நாடு | நேபாளம் |
---|---|
மாநிலம் | பாக்மதி மண்டலம் |
கிளையாறுகள் | |
- இடம் | லால்பகையா ஆறு, விஷ்ணுமதி ஆறு |
- வலம் | மனோகரா ஆறு, மாரின் கோலா ஆறு, அத்வாரா ஆறு, கமலா ஆறு |
நகரங்கள் | காட்மாண்டு, பதான் |
உற்பத்தியாகும் இடம் | பக்துவார் |
- அமைவிடம் | சிவபுரி மலைகள், காத்மாண்டு, நேபாளம் |
- உயர்வு | 2,690 மீ (8,825 அடி) |
- ஆள்கூறு | 27°46′16″N 85°25′38″E |
கழிமுகம் | கோசி ஆறு |
- அமைவிடம் | ககரியா, இந்தியா |
- ஆள்கூறு | 26°07′19″N 85°42′29″E |
மூடு
பாக்மதி ஆறு, இந்தியாவின் கங்கை ஆறு போன்று புனிதமானது.
நேபாள நாட்டு இந்து சமய வழக்கப்படி, இறந்தவரின் உடலை எரிப்பதற்கு முன்னர், புனித பாக்மதி ஆற்றில் மூன்று முறை அமிழ்த்தி எடுக்கின்றனர்.[1] [2]