பலாங்கீர் மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பலாங்கீர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பலாங்கீர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டம் பல விழாக்களை, மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுகிறது. சிதால் சாஸ்தி, நுகாய், பைஜியுண்டியா, பூஜியாண்டியா, சிவா ராத்ரி மேளா, படகந்தா ஜாத்ரா, ஷரபனா பூர்ணிமா ஆகியவை இங்கு கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்கள் ஆகும். இம்மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க சில நபர்களில், ஒடிசாவின் முன்னாள் முதல்வராக ஸ்ரீ ராஜேந்திர நாராயண் சிங் தியோ ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார். இந்த மாவட்டத்தின் பிற முக்கிய நபர்களாக, டாக்டர் சீனிவாஸ் உட்கட்டா (எழுத்தாளர்), எர் சாம் பிட்ரோடா (தொலைத்தொடர்பு விஞ்ஞானி), செல்வி காயத்ரி சரஃப் (எழுத்தாளர்), சுஷ்ரீ ஆனந்தினி டார்ஜி (விளையாட்டு நபர்) போன்றவர்களைச் சொல்லலாம்.