பரோடா அரசு
From Wikipedia, the free encyclopedia
பரோடா அரசு அல்லது பரோடா சமஸ்தானம் (Baroda State), மராத்தியப் பேரரசின் படைத்தலைவர்களான பேஷ்வாக்களின் வழித்தோன்றல்களில் ஒரு கிளையினரான கெயிக்வாட் எனும் தேசஸ்த் பிராமண குலத்தவர்களால் ஆளப்பட்டது.
விரைவான உண்மைகள்
பரோடா அரசு બડોદા રિયાસત बड़ोदा रियासत | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
1909இல் பரோடா சமஸ்தானம் | ||||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1721 | ||||
• | Accession to India | 1949 | ||||
பரப்பு | ||||||
• | 1921 | 3,239 km2 (1,251 sq mi) | ||||
Population | ||||||
• | 1921 | 21,26,522 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 656.5 /km2 (1,700.4 /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | குஜராத், இந்தியா | |||||
"A Catalogue of Manuscript and Printed Reports, Field Books, Memoirs, Maps ..." Vol. iv, "Containing the treaties, etc., relating to the states within the Bombay presidency" |
மூடு
பரோடா நகரத்தை தலைநகராகக் கொண்டு, பரோடா அரசு 1721 முதல் 1949 முடிய கெயிக்வாட்களால் ஆளப்பட்டது. பின்னர் பரோடா சுதேச சமஸ்தானத்தின் நிலப்பரப்புகள், விடுதலை இந்தியாவில், 1 மே 1949இல் மும்பை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[1] பரோடா மன்னருடன் ஹைதராபாத் நிஜாம், சம்மு காசுமீர் மன்னர், மைசூர் மன்னர் மற்றும் குவாலியர் மன்னர் ஆகிய ஐவருக்கும் மட்டுமே பிரித்தானிய இந்திய அரசால் 21 பீரங்கிகள் முழங்க சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.[2]. தற்போது பரோடா அரசின் பகுதிகள் குஜராத் மாநிலத்தில் உள்ளது.