பரப்பிரம்மன்
From Wikipedia, the free encyclopedia
பரப்பிரம்மன் (Para Brahman) (சமசுகிருதம்:परब्रह्मन्) என்பதற்கு அனைத்து உயிர்களுக்கும், பிரபஞ்சங்களுக்கும் மேலான இறைவன் என்றும், அத்தகைய இறைவனின் குண நலன்களை வாயால் எடுத்துரைக்க இயலாததாகும் என்றும் இந்து சமயச் சாத்திரங்கள் கூறுகின்றன.
பரப்பிரம்மனே படைத்தல், காத்தல், மறைத்தல் எனும் முத்தொழில்களுக்கும் காரணமானவன் என்று போற்றப்படுகிறார். மேலும் பரப்பிரம்மன் சத் சித் ஆனந்த (முழு ஞான வடிவாக) இருப்பவர் என்றும் வர்ணிக்கப்படுகிறார். உபநிடதங்கள் நிர்குண பரப்பிரம்மதை ஞானத்தால் மட்டும் அறிவதன் மூலம் மனநிறைவு, ஜீவ முக்தி மற்றும் விதேக முக்தி கிட்டும் என முடிவாகக் கூறுகிறது சிலர் இதனை வேறு மாதிரியும் கூறுவர். அதாவது இந்த பிரபஞ்சம் தோன்றக் காரணமான செயல் நடத்தையைக் குறிக்கிறது. பர என்றால் ஆதி என்றும் அர்த்தம். ஆகவே பரப்பிரம்மன் என்பது இந்த பிரம்மம் தோன்ற காரணமாய் இருந்த காரணியைக் குறிக்கிறது.