பம்மல் சம்பந்த முதலியார்
From Wikipedia, the free encyclopedia
பம்மல் சம்பந்த முதலியார் (Pammal Sambandha Mudaliar, பெப்ரவரி 1, 1873 – செப்டம்பர் 24, 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.[2]
விரைவான உண்மைகள் பம்மல் சம்பந்த முதலியார், பிறப்பு ...
பம்மல் சம்பந்த முதலியார் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஞானசம்பந்தம் (1873-02-01)பெப்ரவரி 1, 1873 [1] பம்மல், சென்னை, தமிழ்நாடு இந்தியா |
இறப்பு | 24 செப்டம்பர் 1964(1964-09-24) (அகவை 91) |
கல்வி | பச்சையப்பா கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி |
பணி | வக்கீல், நீதியரசர், நாடக ஆசிரியர், நடிகர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சபாபதி, மனோகரா |
பட்டம் | தமிழ் நாடகத் தந்தை |
பெற்றோர் | பம்மல் விஜயரங்க முதலியார் - மாணிக்கவேலு அம்மாள் |
விருதுகள் | பத்ம பூசண் (1959) |
மூடு
முதன்முதலில் புஷ்பவல்லி என்ற சமூக நாடகத்தை 1883ல் எழுதி நடித்தார்.
1891ல் சென்னையில் சுகுணவிலாச சபா என்ற அமெச்சூர் நாடகசபையைத் தோற்றுவித்து நாடகங்களை எழுதி தாமே நடித்து பிற அறிஞர்களையும் நடிக்க வைத்த சான்றோர் இவர்.