பன்றிக்களை
From Wikipedia, the free encyclopedia
பன்றிக்களை[சான்று தேவை] (Amaranthus), திரளாக அமரந்த் (amaranth) எனப்படுகிறது.[1] பன்றிக்களை என்பது உலகெலாம் பரவிய ஆண்டுத் தாவரமாகவோ பருவத் தாவரமாகவோ அமைகிறது. சில பன்றிக்களை இனங்கள் கீரையாகவோ போலிக் கூலங்களாகவோ அழகு தாவரங்களாகவோ பயிரிடப்படுகின்றன. பெரும்பாலான பன்றிக்களை இனங்கள் கோடைப் பருவக் களைகளாக அமைகின்றன.[2] கோடையில் அல்லது இலையுதிர் காலத்தில் பூனை மென்மயிர் போன்ற அடர் இதழ்கள் அமைந்த மஞ்சரிகள் பூக்கின்றன.[3] பன்றிக்களை இனங்களின் பூக்களும் இலைகளும் தண்டும் கடல்நீலம் முதல் செஞ்சிவப்பு வரையிலான பல மிளிரும் வேறுபடுகின்றன, இவை கிடைநிலையில் 3 அடி முதல் வண்ணங்களில் 8 அடிவரை வளர்கின்றன. இதன் உருளையான நாரிழை கொண்ட சதைப்பற்றுள்ள தண்டு போலானது (உள்ளீடற்றது). காடிகள் (வரிப்பள்ளங்கள்) அமைந்தது. முதிர்ந்ததும் அதில் சிற்றிலைகள் அமைகின்றன.[4]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
அமரந்தசு பேரினத்தில் 75 இனங்கள் அமைகின்றன. இவற்றில் பத்து இனங்கள் இருபாலின வாகும்.ஐவை பத்தும் வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டன. எஞ்சிய 65 இனங்கள் ஒருபாலின வாகும். இவை தாவரவகை இனப்பெருக்கம் உடையனவாகும். இவைனானைத்துக் கண்டங்களிலும் வெப்பத் தாழ்நிலங்களில் இருந்து இமயமலைக் குளிர்வரை எங்கும் பரவி வளர்கின்றன.[5] இந்தப் பேரினத் தாவரங்கள் இதற்கு மிகவும் நெருங்கிய செலோசியா பேரினத்துடன் பல பான்மைகளையும் பயன்பாடுகளையும் பகிர்கின்றன.