பத்மா ஆறு
பங்களாதேஷில் ஒரு நதி / From Wikipedia, the free encyclopedia
பத்மா ஆறு (Padma) (வங்காளம்: পদ্মা பாட்டா) வங்காளதேசம் மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். இந்தியாவின் மேற்கு வங்காளத்திலுள்ள கிரியா என்ற நகரத்திற்கு கீழ்நிலையில் இந்த ஆறு பாய்கிறது. கங்கை ஆற்றின் முக்கிய கிளை ஆறாகவும் இது கருதப்படுகிறது. தென்கிழக்கில் 120 கி.மீ. தூரத்திற்கு பயணித்து வங்காள விரிகுடாவிற்கு[1] அருகில் மேக்னா ஆற்றுடன் சங்கமிக்கிறது. ராச்சாகி நகரம் பத்மா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது [2]. இருப்பினும் 1966 ஆம் ஆண்டு முதல் பத்மா ஆற்றின் அரிப்பு காரணமாக கிட்டத்தட்ட சிகாகோ நகரத்தைப் போன்ற 256 சதுர மைல்களுக்கு மேற்பட்ட நிலப்பகுதி இழக்கப்பட்டுள்ளது [3].
விரைவான உண்மைகள் பத்மா ஆறு, அமைவு ...
பத்மா ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
நீளம் | 120 கிலோமீட்டர்கள் (75 mi)[1] |
மூடு