பகல்கம்
From Wikipedia, the free encyclopedia
பகல்காம் (Pahalgam) அல்லது பெகல்காம் (காஷ்மீரி உச்சரிப்பு: பெகல்காம் :'மேய்ப்பர்களின் கிராமம்') [1] ) என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் வடக்கே அமைந்துள்ள காஷ்மீர் ஒன்றியப் பகுதியில், அனந்தநாக் மாவட்டத்தின் வடக்கே அமைந்த மலைவாழிடமும் சுற்றுலாத் தலமும் ஆகும்.[2] அனந்தநாக் நகரத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில், லித்தர் பள்ளத்தாக்கில், லித்தர் ஆற்றங்கரையில், இமயமலையில் 7200 அடி உயரத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் பகல்காம், நாடு ...
பகல்காம் | |
---|---|
மலை வாழிடம் | |
ஆள்கூறுகள்: 34.01°N 75.19°E / 34.01; 75.19 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | அனந்தநாக் |
ஏற்றம் | 2,740 m (8,990 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,922 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | உருது |
• வட்டார மொழிகள் | காஷ்மீரி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 192126 |
மூடு
பகல்காம் நகரம், பகல்காம் வருவாய் வட்டத்தின் தலைமையிடம் ஆகும். ஆண்டுதோறும் சூலை -ஆகஸ்டு மாதங்களில் நடைபெறும் அமர்நாத் யாத்திரையின் போது, பகல்காம் ஊருக்கு வெளியே யாத்திரிகர்களின் தற்காலிகத் தங்கும் பெரிய முகாம்கள் ஆண்டுதோறும் அமைக்கப்படுகிறது. அமர்நாத் யாத்திரை தொடங்குமிடமான சந்தன்வாரி முகாம், பகல்காமிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.