![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Noahs_Ark.jpg/640px-Noahs_Ark.jpg&w=640&q=50)
நோவாவின் பேழை
From Wikipedia, the free encyclopedia
நோவாவின் பேழை என்பது நோவா, யாவே கடவுளின் கட்டளைப்படி கட்டிய பெரிய ஒரு கப்பலாகும். பெரு வெள்ளப்பெருக்கு ஒன்றிலிலிருந்து நோவாவையும் அவனது குடும்பத்தையும் உலகில் உள்ள விலங்கு இனங்களையும் காக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது. இந்த சம்பவம் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் நூலில் 6 தொடக்கம் 9 ஆம் அதிகாரங்களில் காணப்படுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Noahs_Ark.jpg/640px-Noahs_Ark.jpg)
18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், புவியியல், மற்றும் அது சார்ந்த்த துறைகளின் வளர்ச்சி மூலம் ஒரு சில வரலாற்றாய்வாளரால் மட்டுமே வெள்ளப்பெருக்கு ஒன்றை நியாயப்படுத்த முடிந்தது. ஆனாலும் பல விவிலிய ஆய்வாளர்கள் நோவாவின் பேழை தரைத்தட்டியதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள அரராத் மலை[1] (வடகிழக்கு துருக்கி) சார்ந்த பிரதேசங்களில் ஆய்வுகளை தொடர்ந்த வண்ணமேயுள்ளனர்.