திருவரங்க நீலாம்பிகை
கலப்படத்தமிழை கேள்விகேட்டவர் / From Wikipedia, the free encyclopedia
திருவரங்க நீலாம்பிகை அம்மையார் (1903-1945) [1] என்பவர் ஒரு தமிழறிஞரும், தமிழாசிரியரும், மொழிப்போர் வீராங்கனையும் ஆவார். இவர் தமிழுடன் வடமொழியும் ஆங்கிலமும் அறிந்தவர். மறைமலை அடிகளாரின் மகளாகிய இவர், அவரைப் போன்றே மொழியறிவு நிரம்பியவர். தமிழ் மொழி தனது தனித்துவத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பிய இவர், மிகுந்து கலந்து இருந்த பிறமொழிச் சொற்களைத் தவிர்த்த தனித்தமிழ் நடையைப் பரப்பினார். இதற்கு உதவியாக வடசொற்றமிழ் அகரவரிசை என்ற நூலையும் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்ற நூலையும் வெளியிட்டார்.
விரைவான உண்மைகள் திருவரங்க நீலாம்பிகை, பிறப்பு ...
திருவரங்க நீலாம்பிகை | |
---|---|
![]() | |
பிறப்பு | நாகை நீலாயதாட்சி 6. ஆகத்து. 1903 பல்லாவரம் |
இறப்பு | 1945 |
தேசியம் | பிரித்தானியாவின் இந்தியர் |
இனம் | தமிழர் |
குடியுரிமை | பிரித்தானிய இந்தியர் |
அறியப்படுவது | தமிழறிஞர், எழுத்தாளர், அகராதி தொகுப்பாளர் |
சமயம் | சைவம் |
பெற்றோர் | மறைமலை அடிகள் |
வாழ்க்கைத் துணை | திருவரங்கனார் |
பிள்ளைகள் | சுந்தரத்தம்மை, முத்தம்மை, வயிரமுத்து, வேலம்மை, சங்கரியம்மை, பிச்சம்மை, மங்கையர்க்கரசி, திருநாவுக்கரசு |
உறவினர்கள் | புலியூர்க் கேசிகன் (மருமகன்) |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c7/Kudiyarasu.jpg/320px-Kudiyarasu.jpg)
இவர் ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் என்ற தலைப்பில் 601 தமிழ்ப் பழமொழிகளுக்கான ஆங்கிலப் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார்.[2]