நாராயண்பூர் மாவட்டம்
சத்தீசுகரில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
நாராயண்பூர் மாவட்டம் (Narayanpur district) (இந்தி:नारायणपुर जिला) மத்திய இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் நாராயண்பூர் ஆகும்.
விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
நாராயண்பூர்மாவட்டத்தின் இடஅமைவு சத்திஸ்கர் | |
மாநிலம் | சத்திஸ்கர், இந்தியா |
---|---|
தலைமையகம் | நாராயண்பூர் |
பரப்பு | 6,640 km2 (2,560 sq mi) |
மக்கட்தொகை | 140,206 (2011) |
படிப்பறிவு | 49.59 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு
நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[1][2][3]
நிர்வாக வசதிக்காக பஸ்தர் மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்தெடுத்து நாராயண்பூர் மாவட்டம் 11 மே 2007-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் நாராயண்பூர் ஆகும். இம்மாவட்டம் 4,653 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை பொழிவு 1300 மில்லி மீட்டராகும்.