தோரின் ஓக்கன்ஷீல்ட்
From Wikipedia, the free encyclopedia
தோரின் ஓக்கன்ஷீல்டு அல்லது மலையடி மன்னன், திரோரின் மகன் திராய்னின் மகன் இரண்டாம் தோரின் ஓக்கன்ஷீல்ட்' (ஆங்கில மொழி: Thorin Oakenshield) என்பவர் 1937 ஆம் ஆண்டு வெளியான ஜே. ஆர். ஆர். டோல்கீன் த காபிட்டு எனும் புனைகதையில் முதன்முதலில் தோன்றிய ஒரு கற்பனையான கதாபாத்திரம் ஆகும். சிமாக்கு எனும் டிராகனிடமிருந்து தனது பிறப்பிடமான எரபார் எனப்படும் தனிமலையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு தேடற்பயணம் சென்ற குள்ளர் குழாமின் தலைவர். இரண்டாம் திராய்னின் மகனும் திரோரின் பேரனுமான தோரின் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில் டூரின் மக்களின் தலைவனார். தோரினின் பின்புலம் 1955 ஆம் ஆண்டு வெளியான த ரிட்டன் ஆப் த கிங் என்ற புனைகதையின் பின்னிணைப்பில் விளக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் தோரின் ஓக்கன்ஷீல்டு, தகவல் ...
தோரின் ஓக்கன்ஷீல்டு | |
---|---|
டோல்கீன் கதை மாந்தர் | |
தகவல் | |
நூல்கள் |
த காபிட்டு (1937) அன்பினிஷெட் டலேசு (1980) |
மூடு