தொல்காப்பியம் இளம்பூரணர் உரை
From Wikipedia, the free encyclopedia
இளம்பூரணர் உரை தொல்காப்பியம் நூல் முழுமைக்கும் உள்ளது. உரை தோன்றிய காலம் 11 ஆம் நூற்றாண்டு. இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பின்பற்றி இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நன்னூல் என்னும் இலக்கண நூல் தோன்றியது. தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட பழைய உரை ஒன்று உண்டு. 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இது தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில் ஒரு பகுதிக்கு மட்டும் கிடைத்துள்ளது.
உரைநலம் - பிறர் உட்புகுந்து காணமுடியாவண்ணம் இருண்டு கிடந்த தொல்காப்பியம் என்னும் சரக்கு அறையுள் தம் அறிவு என்னும் அவியா விளக்கைக் கொண்டு துருவி, ஆங்கே குவிந்து கிடந்த அரிதான குவியல்களை உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகை என இளம்பூரணரை மு. இராகவையங்கார் பாராட்டியுள்ளார்.