தைனிக் பாஸ்கர்
From Wikipedia, the free encyclopedia
தைனிக் பாஸ்கர் (ஆங்கிலம்: Dainik Bhaskar) ( இந்தி: दैनिक भास्कर ) என்பது இந்தியாவில் விற்பனையாகும் முதன்மை இந்தி மொழி நாளேடுகளில் ஒன்று ஆகும்.[1] இது குஜராத்தில் அதிகம் வெளியாகும் நாளேடாகவும் அதிகப் பதிப்புகளைக் கொண்ட நாளேடாகவும் விளங்குகிறது. இது அகமதாபாத், பரோடா, சூரத், ஜம்நகர், ராஜ்காட், பூஜ், மெசானா, பாவ்நகர் ஆகிய நகரங்களில் அச்சடிக்கப்பட்டு வெளியாகிறது.
இது இந்தியாவின் மிகப்பெரிய அச்சு ஊடக நிறுவனமான தைனிக் பாஸ்கர் குழுமத்திற்கு (டி.பி. கார்ப் லிமிடெட்) சொந்தமானது. 1958 இல் போபாலில் தொடங்கப்பட்ட இது 1983 ஆம் ஆண்டில் தைனிக் பாஸ்கரின் இந்தூர் பதிப்பை அறிமுகப்படுத்தியது. இன்று, டைனிக் பாஸ்கர் குழு 14 மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் 63 பதிப்புகளுடன் உள்ளது