தேசபந்து
From Wikipedia, the free encyclopedia
தேசபந்து (Deshabandu) என்பது, இலங்கை அரசாங்கத்தால் குடிமக்களுக்காக வழங்கப்படும் கௌரவங்களில் சிறீ லங்காபிமான்ய /(தேசகீர்த்தி [தொடர்பிழந்த இணைப்பு]), தேசமான்ய என்பவற்றுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவம் ஆகும். நாட்டுக்கு மிகவும் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு இந்தக் கௌரவம் அளிக்கப்படுகிறது.[1] வழமையாக இக்கௌரவம் பெற்றவரின் பெயருக்கு முன்னால் தேசபந்து என்ற சொல்லையும் சேர்த்து வழங்குவர். (எ.கா: தேசபந்து சிவா சின்னத்தம்பி).
தேசபந்து என்ற சமசுகிருத சொல்லிற்கு நாட்டின் நண்பன் என்று பொருள். பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் இந்திய விடுதலை இயக்கத்திற்காக போராடிய தலைவர்களை பொதுமக்கள் தேசபந்து என்ற அடைமொழியுடன் அழைப்பர். எடுத்துக்காட்டு: சித்தரஞ்சன் தாஸ்[2]