![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/33/1335%25E0%25AE%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D_%25E0%25AE%2586%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE.svg/langta-640px-1335%25E0%25AE%2587%25E0%25AE%25B2%25E0%25AF%258D_%25E0%25AE%2586%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE.svg.png&w=640&q=50)
துருக்கிய-மங்கோலிய கலாச்சாரம்
From Wikipedia, the free encyclopedia
துருக்கிய-மங்கோலியம் அல்லது துருக்கிய-மங்கோலிய கலாச்சாரம் என்பது ஆசியாவில் 14ம் நூற்றாண்டின் போது தங்க நாடோடிக் கூட்டம் மற்றும் சகதை கானேடு ஆகிய அரசுகளின் ஆளும் வர்க்கத்தினர் இடையே வளர்ந்த இன கலாச்சார தொகுப்பு ஆகும்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/33/1335%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.svg/320px-1335%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.svg.png)
இந்த கானேடுகளின் ஆட்சி செய்த மங்கோலிய ஆளும் வர்க்கத்தினர் அவர்கள் வென்று ஆட்சி செய்த துருக்கிய மக்களுடன் இறுதியாக ஒன்றினர். இவ்வாறாக அவர்கள் துருக்கிய-மங்கோலியர் என்று அழைக்கப்பட்டனர். இந்த ஆளும் வர்க்கத்தினர் படிப்படியாக இஸ்லாம் மதம் (முந்தைய மதங்களான தெங்கிரி மதம் போன்றவற்றிலிருந்து) மற்றும் துருக்கிய மொழிகளை ஏற்றுக்கொண்டனர். அதே நேரத்தில் மங்கோலிய அரசியல் மற்றும் நீதி அமைப்புகளை அப்படியே தொடர்ந்தனர்.[1]
துருக்கிய-மங்கோலியர்கள் மங்கோலிய கானேடுகளின் வீழ்ச்சிக்கு பிறகு அதன் வழியில் பல்வேறு அரசுகளை நிறுவினர். உதாரணமாக நடு ஆசியாவில் தங்க நாடோடிக் கூட்டம் மற்றும் தைமூரிய பேரரசுகளை பின் தொடர்ந்த தாதர் கானேடுகளை கூறலாம்.