துக்ரில்
From Wikipedia, the free encyclopedia
துக்ரில் (முழுப்பெயர்: ருக்ன் அல்-துன்யா வா அல்-தின் அபு தாலிப் முகம்மத் தொக்ருல்-பெக் இபின் மிக்கைல்) என்பவர் செல்யூக் பேரரசை நிறுவியவர் ஆவார். இவர் ஒரு துருக்மேனியர்.[1][2] 1037 முதல் 1063 வரை ஆட்சி செய்தார். பெரிய ஆசிய புல்வெளிகளில் இருந்த துருக்மேனிய போர்வீரர்களை பழங்குடி இனங்களின் ஒரு கூட்டமைப்பாக ஒன்றிணைத்தார். அவர்கள் அனைவரும் செல்யூக் என்ற பெயருடைய ஒரு மூதாதையரை கொண்டிருந்தனர். அவர்களைக் கொண்டு கிழக்கு ஈரானை இவர் கைப்பற்றினார். பாரசீகத்தை வென்று 1055 ஆம் ஆண்டு புயிட்களிடமிருந்து அப்பாசிய தலைநகரமான பகுதாதுவை மீட்டெடுத்த பின்னர் செல்யூக் சுல்தானகத்தை இவர் நிறுவினார். துக்ரில் அப்பாசிய கலீபாக்களை மாநில தலைவர்களாக மாற்றி வெளியேற்றினார். பைசாந்தியப் பேரரசு மற்றும் பதிமிட்களுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களில் கலீபகத்தின் ராணுவத்திற்கு தலைமை தாங்கினார். தனது பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தவும் இஸ்லாமிய உலகத்தை ஒன்று படுத்தவும் அவர் இவ்வாறு செய்தார்.